ஹெரோயின் போதைப்பொருளுடன் பதுளையில் ஒருவர் கைது!

பதுளை, மெதபதான பகுதியில் 5710 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த நபரொருவர் நேற்று (12) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை, மாபகதேவாவ, கெமுனுபுர பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மஹியங்கனையிலிருந்து பதுளைக்கு போதைப்பொருள் எடுத்துவருகிறார் என பதுளை பொலிஸ் பிரிவின் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமையவே குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்டதன் பின்னர் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles