ஹெரோயின் போதைப்பொருளுடன் பண்டாரவளையில் ஒருவர் கைது!

ஹெரோயின் போதைப்பொருள் தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் பண்டாரவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் சுற்றி திரிவதாக பண்டாரவளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபரை சுற்றிவளைத்து சோதனைக்கு உட்படுத்திய போது சந்தேக நபரிடம் இருந்து சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4019 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 44 வயதுடைய இலக்கம் 02 , பொல்பிடிய , பல்லகெடுவ பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நேற்று இரவு சுமார் 9.00 மணியளவில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles