10 நாட்களில் 573 விபத்துகள் – 47 பேர் பலி! 127 பேர் படுகாயம்!!

நாட்டில் கடந்த 10 நாட்களில் 573 விபத்துகள் இடம்பெற்றுள்ளன என்றும் இதில் 47 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி முதல் இன்று காலைவரையான காலப்பகுதியிலேயே மேற்படி விபத்துகள் இடம்பெற்றுள்ளன.

இவ்விபத்துகளில் 127 பேர் படுகாயமடைந்துள்ளனர். 394 பேருக்கு சிறு அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளன. 132 வாகனங்களும் சேதமடைந்துள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

Related Articles

Latest Articles