மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கும், களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 12 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, கேகாலை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள 41 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) அதிகாலை 04 மணி முதல் நாளை திங்கட்கிழமை (03) அதிகாலை 04 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.