பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பெப்ரவரி மாதம் முதல் சம்பள உயர்வை வழங்குவதற்கு எதிர்ப்பார்ப்பதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக பெப்ரவரி முதல் வாரம் சம்பள நிர்ணய சபை கூட்டப்படும் என்று தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவரை அதிகரிப்பதற்கான நடவடிக்கை சம்பள நிர்ணயசபை ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையிலேயே சம்பள நிர்ணயசபை பெப்ரவரி முதல் வாரத்தில் கூடவுள்ளது.