இலங்கைக்கும் வியட்நாமிற்குமிடையிலான நேரடி விமான சேவைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான முதலாவது விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திலிருந்து வருகை தந்த ஏN-671 என்ற இலக்கத்தைக் கொண்ட எயார்பஸ் யு-320 ரக விமானம் நேற்றிரவு 11.02 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இவ்விமானத்தில் 164 பயணிகள் நாட்டுக்கு வருகை தந்த நிலையில், அதே விமானத்தில் 172 பயணிகள் மீண்டும் வியட்நாம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.
இந்நேரடி விமான சேவையின் கீழ் வாரத்தில் 03 நாட்கள், குறிப்பாக ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் கட்டுநாயக்கவிற்கும் வியட்நாமிற்கும் இடையில் விமானப் பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.










