‘ 1000 ரூபா என்பது பாட்டி வடை சுட்டக் கதையாக இருக்ககூடாது’

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும். கூட்டு ஒப்பந்தத்துக்கும், பட்ஜட் முன்மொழிவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.” – என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2020 தை மாதம் முதல் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்திருந்தார். அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் 2021 தை மாதம் முதல் ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்ற முன்மொழிவை பிரதமர் முன்வைத்துள்ளார்.

ஆனால் அந்த முன்மொழிவு – உறுதிமொழியானது பாட்டி வடை சுட்ட கதையாக இருக்ககூடாது. ஏற்கனவே அந்த கதைகளைக் கேட்டுவிட்டோம். எனவே, எவ்வித நிபந்தனையும் இன்றி அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும். தொழில் சுமைகள் அதிகரிக்கப்படக்கூடாது.

கூட்டு ஒப்பந்தம் என்பது வேறு, அரசு வழங்கியுள்ள உறுதிமொழி வேறு. எனவே, அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றவேண்டும். கூட்டு ஒப்பந்தத்தை நாம் பார்த்துக்கொள்கின்றோம். ” – என்றார்.

 https://www.facebook.com/api.official.lk/videos/432819831451721

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles