“ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் வெளிவந்த பின்னரே யாரை ஆதரிப்பது என்று இலங்கைத் தொழிலாளார் காங்கி ரஸ் கட்சி முடிவு எடுக்கும்.” – இவ்வாறு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளார் காங்கி ரஸ் கட்சியின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் ஆளுநர் இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டைப் பொறுப்பேற்ற பின்னர் எல்லோரும் வாழக்கூடிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. இவரை நம்பி பின்னால் போனால் எதிர்வரும் 5 வருடங்களில் நாடு அதிக வளர்ச்சியடையும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும். அதைவிடுத்து மாற்று முடிவு எடுக்கும் போது மக்கள் மீண்டும் பொருளாதார வீழ்ச்சிக்குள் தள்ளப்படும் வாய்ப்பு ஏற்ப டும் என்ற பெரிய அச்சம் இருக்கின்றது.
மலையக மக்கள் தங்கள் பெறுமதி யான வாக்குகளை வீணடிக்கக்கூடாது. ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கின்றதோ அந்த வேட்பாளருக்கு வாக்களித்து எங்களது உரிமைகளைத் தக்கவைக்க வேண்டும். இலங்கைத் தொழிலாளார் காங்கி ரஸ் கட்சியினராகிய நாம், ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் வெளிவந்த பின்னரே யாரை ஆதரிக்கின்றோம் என்ற முடிவை அறிவிப்போம்.” – என்றார்.