இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 104 புதிய ‘மெட்ரோ’ பஸ்கள், வரும் செப்டம்பர் மாதம் முதல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
ராகமை முதல் பத்தரமுல்ல வரையிலான வழித்தடங்களில் இந்தப் பஸ்களைச் சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பஸ்கள் இயக்கப்படும் முக்கிய மத்திய நிலையமாகப் பொரளை விளங்கும் என்று ‘மெட்ரோ பஸ்’ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
முழுமையாகக் குளிரூட்டப்பட்ட சொகுசு வசதிகளைக் கொண்ட மெட்ரோ பஸ்களே இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பஸ்களில் பயணக் கட்டணம் செலுத்தும் நடைமுறை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
இப் பஸ்களைப் பராமரிப்பதற்காகப் புதிதாக 4 பணிமனைகளை (Depots) நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ பஸ் நிறுவனத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
