ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக்கப்படும்!

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் ஸ்ரீ வரகாகொட ஞானரதன தேரரை சந்தித்த போது ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

“ நாட்டின் பிள்ளைகளின் கல்விக்காக ஆசிரியர்கள் காலை வேளையில் பாடசாலைகளில் இருக்க வேண்டியது கட்டாயமானது , ஏதேனும் காரணங்களுக்காக எதிர்வரும் காலங்களில் அவ்வாறு நடக்காமல் இருக்கமாயின் பாடசாலை மாணவர்களின் கல்வியை இழப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என்பதால், ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும்.” – எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 

Related Articles

Latest Articles