நாட்டில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நீரில் மூழ்கி 230 பேர் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என தெரியவருகின்றது.
சிலாபம் – தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற 05 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இத்துயர் சம்பவம் நேற்று இடம்பெற்றது.
முன்னேச்சரத்துக்கு சுற்றுலா சென்றிருந்த குழுவில் இருந்த ஐவரே உயிரிழந்துள்ளனர். இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்களாவர்.










