கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 15 மாவட்ட கடற்றொழில் அலுவலகங்களுக்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (19) கொழும்பில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிதாக நியமனம் பெற்ற 112 கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கும் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கடற்றொழில் துறையின் சேவைகளை மேலும் வலுப்படுத்துவதுடன், மாவட்ட மட்டத்தில் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அரச சேவைகளை விரைவாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுக்கும் நோக்கில் இந்நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி. பீ.கே. கோலித்த கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த உள்ளிட்ட அமைச்சு மற்றும் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.










