வவுனியாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான ஊடக சந்திப்பைப் புறக்கணித்து முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வெளியேறிச் சென்ற சம்பவம் நேற்று இடம்பெற்றது.
வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள விருந்தினர் விடுதியொன்றில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக் குழுவின் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் பின் ஊடக சந்திப்பும் நடைபெற்றது.
அந்த ஊடக சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அமர்ந்து கொண்டு குறித்த சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனையும் அழைத்தார். ஆனால், அவர் வரவில்லை.
இதன்போது, கட்சியின் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் சிறீதரனை அழைத்திருந்தார். அவர் ஊடக சந்திப்பில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்ததையடுத்து, கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் மற்றும் ரஞ்சினி ஆகியோர் சிறீதரனைக் கையால் பிடித்து இழுத்து அமருமாறு கோரிய போதும் அவர் அதை ஏற்காது அஙகிருந்து வெளியேறிச் சென்றார்.
இதையடுத்து, எம்.ஏ.சுமந்திரன், “சரி விடுங்கோ…” எனக் கூறிவிட்டு பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கத்துடன் இணைந்து ஊடக சந்திப்பை நடத்தினார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட தேர்தல் தொகுதியில் சி.சிறீதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
