முன்னாள் இலங்கை தமிழ் வர்த்தக சங்கத்தின் நிதி அனுசரணயில் சுமார் நூற்றுக்கும் அதிகமான மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வு நுவரெலியா – பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கடந்த இரண்டாம் திகதி இடம் பெற்றிருந்தது. குறித்த நிகழ்வின் விஷேட அதிதியாக World action foundation ஸ்தாபக தலைவர் சுபாஷ் சுந்தர்ராஜ் அவர்களும் நுவரெலியா பிரதி கல்வி பணிப்பாளரும் கலந்து கொண்டனர்.

கல்லூரியின் அதிபர் எஸ்.ரவிச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியை சேர்ந்த வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட 127 மாணவர்களுக்கு சுமார் 240,000/= பெறுமதியில் பாதணி சோடிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. குறித்த பாதனிகளை பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியில் பழைய மாணவரும் வேர்ல்ட் எக்ஸ்டன் ஃபவுண்டேஷனில் ஸ்தாபக தலைவருமான திரு சுபா சுந்தர்ராஜ் அவர்கள் வழங்கி வைத்தார். நிகழ்வின் போது கருத்து தெரிவித்த பிரதிக் கல்வி பணிப்பாளர் நிதியுதவி நல்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி தெரிவித்ததோடு மாணவர்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் தன்னுடைய கருத்துக்களை முன் வைத்தார்.











