” அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. அது பற்றி அமைச்சரவையிலும் கலந்துரையாடப்படவில்லை. புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவே இது தொடர்பில் தீர்மானம் எடுக்கும்.”
இவ்வாறு அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (3) முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன்போது 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.