14 வயது சிறுமி மாயம்! லுணுகலை பொலிஸார் தேடுதல்!!

லுணுகலை  27 ஆம் கட்டை பகுதியில் 14 வயது பாடசாலை மாணவியொருவர் காணாமல்போயுள்ளார். இது தொடர்பில் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவியின் பெற்றோர், தங்களால் நடத்தி செல்லப்படும் கடையொன்றுக்கு நேற்று சென்றுள்ளனர். அதன்பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் வீடு சென்று பார்த்தபோது, சிறுமி வீட்டில் இருக்கவில்லை என லுணுகலை  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்

சிறுமியை தேடும் நடவடிக்கையில்  லுணுகலை  பொலிஸார்  ஈடுபட்டு வருகின்றனர்

-ராமு  தனராஜா-

Related Articles

Latest Articles