15 வயது சிறுமி வன்புணர்வு – பூசாரிக்கு 12 ஆண்டுகள் கடூழியச் சிறை!

கிளிநொச்சி, பளை பிரதேசத்தில் 15 வயதான சிறுமியை வன்புணர் வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச் சாட்டை எதிர்நோக்கிய பூசாரி ஒரு வருக்குக் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சஹாப்தீன் 12 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இந்தச் சிறைத்தண்டனைக்கு மேல திகமாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்படட சிறுமிக்கு இழப்பீடாக இரண்டு இலட்சம் ரூபாவும், 10 ஆயிரம் ரூபா அபராதத் தையும் செலுத்துமாறு நீதிபதி உத்தர விட்டுள்ளார்.

சிறுமிக்குச் செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகை செலுத்தத் தவறி னால், மேலும் இரண்டு ஆண்டுகளும், அபராதத் தொகை செலுத்தத் தவறி னால் மேலும் ஆறு மாதங்களும் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பில் கூறப்பட் டுள்ளது.

குற்றவாளியான பூசாரி கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி சிறுமியை வன்புணர்வுக்கு உட் படுத்தியுள்ளார். சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார், சந்தேகநபரைக் கைது செய்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர்.

அந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டு வந்த வழக்கு, சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய கிளி நொச்சி மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டது. சிறுமியின் சாட்சியம் மற்றும் விஞ்ஞான ரீதியான சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளி, குற்றத் தைச் செய்துள்ளார் என்பது தெளிவாக ஒப்புவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles