15 பேர் சுட்டுக்கொலை! செக் குடியரசில் பயங்கரம்!!

ஐரோப்பிய நாடான செக் குடியரசில், துப்பாக்கிதாரியால் 15 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடான செக் குடியரசில் தலைநகர் பிரேக் அருகே பலாச் சதுக்கம் உள்ளது. இங்கு பல்கலைக்கழகம் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இங்கு நேற்று மர்ம நபர் ஒருவர் நவீன துப்பாக்கியுடன் வந்தார். திடீரென அந்த பள்ளியில் நுழைந்த அவர் கண்ணில் பட்டவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் ஏராளமானோர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுமார் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே பிரேக் துப்பாக்கிச் சூட்டுக்கு சர்வதேச பயங்கரவ…

Related Articles

Latest Articles