16 நாட்களில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

நாட்டில் கடந்துள்ள 16 நாட்களில் மாத்திரம் 13,027 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 3,672 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 2,646பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 1,225 பேருக்கும் வைரஸ் பரவியுள்ளது.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் 132 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 795 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, கடந்த நவம்பரில் 17 ஆயிரத்து 472 பேருக்கும், டிசம்பரில் 18 ஆயிரத்து 838 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles