17 ஆம் திகதி பல நல்ல செய்திகள் வரும்….!

நாட்டில் நிலவும் பல பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி சிறந்த தீர்வு கிடைக்கும் என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 17 ஆம் திகதி பாதீட்டை முன்வைக்கவுள்ள நிலையிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு கூறினார்.

‘ அதிபர், ஆசிரியர்கள் உட்பட அரச ஊழியர்களுக்கு பாதீட்டில் சம்பள உயர்வு கிடைக்கப்பெறவுள்ளது. நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளும் ஈடேறும் வகையிலேயே பாதீடு அமையவுள்ளது.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles