1,747 பில்லியன் ரூபா நிதி அறிக்கை – சபையில் நாளை விவாதம்

பாராளுமன்றம் நாளை முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

அடுத்த நான்கு மாதங்களுக்கு அரச செலவீனங்களை ஈடுசெய்வதற்காக 1747.68 பில்லியன் ரூபாவுக்கான இடைக்கால கணக்கறிக்கைமீது விவாதம் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 6.30 மணிவரை விவாதம் தொடரும்.

மறுநாள் 28 ஆம் திகதியும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை இடைக்கால கணக்கறிக்கைமீதான விவாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால கணக்கறிக்கை அண்மையில் பாராளுமன்ற செயலகத்தில் கையளிக்கப்பட்டு ஒழுங்கு புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles