கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 21 ஆயிரத்து 338 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 197 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை கடந்துள்ள 18 நாட்களில் கொழும்பு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 806 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 99 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.