நாட்டில் மேலும் 9 கிராம சேவகர் பிரிவுகள் நேற்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி யாழ். மாவட்டத்தில் பலாலி வடக்கு கிராம சேவகர் பிரிவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்மடு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், மொனறாகலை மாவட்டத்தில் கிரிவெவ, செவனகல, பஹிராவ, ஹபரத்தவெல, ஹபருகல, மஹாம, இதிகொலபெலஸ்ஸ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, நாட்டில் 18 மாவட்டங்களில் 199 கிராம சேவகர் பிரிவுகளிலும், ஒரு பொலிஸ் பிரிவிலும் தனிமைப்படுத்தல் நடைமுறை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
26 கிராம சேவகர் பிரிவுகளும், 3 பொலிஸ் பிரிவுகளும் இதுவரை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.










