நாட்டில் 2025 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 19 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இச்சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் இன்று கூறினார்.
பாதாள குழுக்களால் 12 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், தனிப்பட்ட மற்றும் இதரகாரணங்களால் 7 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. 13 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.” எனவும் அவர் குறிப்பிட்டார்.










