2ஆவது அலைமூலம் 1,123 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா!

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் இதுவரை ஆயிரத்து 123 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்று 42 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் எனவும் அவர் கூறினார். எனினும், ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று என வெளியாகியுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles