கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (06) 24 ஆயிரத்து 318 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 127 பேர் பலியாகியுள்ளனர்.
மினுவாங்கொட கொத்தணிமூலம் 3 ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 21 ஆயிரத்து 259 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 17 ஆயிரத்து 52 பேர்வரை குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 649பேருக்கு வைரஸ் தொற்றியது.
அதேவேளை, இலங்கையில் நேற்றுவரை மொத்தமாக 27 ஆயிரத்து 876 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 20 ஆயிரத்து 459 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவால் நேற்று மூவர் உயிரிழந்தனர். இதன்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது. 2ஆவது அலை உருவாவதற்கு முன்னர் 13 பேரே மரணித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.










