2ஆம் அலை மூலம் இதுவரை 7,746 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் மேலும் 164 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

பேலியகொடை மீன் சந்தை தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 121 பேருக்கும், தனிமைப்படுத்த நிலையத்திலிருந்த 43 பேருக்குமே பிசிஆர் பரிசோதனைமூலம் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா 2ஆவது அலைமூலம் பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 746 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, இலங்கையில் கடந்த மார்ச் முதல் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 5 ஆயிரத்து 249 பேர் குணமடைந்துள்ளனர். 21 பேர் பலியாகியுள்ளனர். 5 ஆயிரத்து 954 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.

Related Articles

Latest Articles