இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலைமூலம் இதுவரையில் 20 ஆயிரத்து 448 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 503 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
2ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 14 ஆயிரத்து 152 பேர் குணமடைந்துள்ளனர்.
நாட்டில் நேற்று மாத்திரம் 12 ஆயிரத்து 31 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 986ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 17 ஆயிரத்து 559 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 309 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. 118 பேர் உயிரிழந்துள்ளனர்.