நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொழும்பு, மோதரை, களுத்துறை, தெஹிவளை மற்றும் இரத்தினபுரியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையினால் மட்டும் இதுவரை 257 பேர் பலியாகியுள்ளனர்.