கொரோனா’ வைரஸ் தொற்றால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர். மூன்று பெண்களும், ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் 60 வயதடைக் கடந்தவர்கள்.
இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் இதுவரை 37 ஆயிரத்து 360 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. 2ஆவது அலைமூலம் 178 பேர் உயிரிழந்துள்ளனர்.
