’20’இற்கு எதிராக குவியும் மனுக்கள் – நேற்று -6 இன்றும் தாக்கல்!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி அரசியல் செயற்பாட்டாளரும், முன்னாள் ஆளுநருமான கீர்த்தி தென்னகோன் உயர்நீதிமன்றத்தில் நேற்று (24) மனு தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற பெரும்பான்மையுடன் மட்டுமல்லாது  ’20’ ஆவது திருத்தச்சட்டமூலம் சர்வஜன வாக்கெடுப்புடனேயே நிறைவேற்றப்பட வேண்டும் என உத்தரவிடுமாறுகோரியே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் இந்த மனுவில் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் கடந்த 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதனை சவாலுக்குட்படுத்தி நேற்று முன்தினம் (23) உயர்நீதிமன்றத்தல் ஆறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள்சக்தி ஆகியவற்றின் மனுக்களும் இதில் அடங்கும்.

இந்நிலையிலேயே 7ஆவது மனுவை கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்துள்ளார். நேற்று மாத்திரம் 6 மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. மேலும் சில அமைப்புகளும் அடுத்துவரும் நாட்களில் மனுக்களை தாக்கல் செய்யவுள்ளன.

Related Articles

Latest Articles