அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் ஜனநாயகத்துக்கு விரோதமாக இருக்கும்பட்சத்தில் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையத்தின் தலைவர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றியமைப்பதற்கான 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை நேற்று (03) அனுமதி வழங்கியது. இது தொடர்பில் வினவியபோதே பாக்கியஜோதி சரவணமுத்து மேற்கண்டவாறு கூறினார்.
” அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பில் ஆராயவேண்டும்.அரசியலமைப்பைமீறும் விதத்தில் 20 அமைந்தால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படும். சுயாதீன ஆணைக்குழுக்கள் எல்லாம் இருக்கவேண்டும் என்பதே எமது கருத்து.” – என்றார்.
