” பௌத்த பீடங்களின் கோரிக்கை உட்பட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான அடுத்தக்கட்ட நகர்வுகள் 20ஆம் திகதிக்கு பின்னரே முன்னெடுக்கப்படும்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போத அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் இலங்கை அமரபுர ராமஞ்ஞ சாமக்ரி சங்க சபை விடுத்துள்ள கூட்டறிக்கை தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு அவர் நேரடி பதிலை வழங்கவில்லை. மழுப்பல் போக்கில் பதிலளித்தார்.
” அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரீசிலனை செய்த உயர்நீதிமன்றம் தனது சட்டவியாக்கியானத்தை சபாநாயகருக்கு அனுப்பிவைத்துள்ளது. உயர்நீதிமன்றின் சட்டவியாக்கியானத்தை சபாநாயகர் எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவிப்பார்.
சபாநாயகர் இவ்வாறு அறிவித்த பின்னரே 20 தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.”- என்றும் அமைச்சர் கெஹலிய குறிப்பிட்டார்.