’20’ ஆல் நெருக்கடி – பங்காளிகளை அவசரமாக சந்திக்கிறார் கோட்டா

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சி தலைவர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குமிடையில் இன்று (18) முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் பங்கேற்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

’20’ ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆளுங்கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்துவருகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே ஜனாதிபதி பங்காளிகளை அவசரமாக சந்திக்கிறார் எனக் கூறப்படுகின்றது. நாளை ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது.

Related Articles

Latest Articles