அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கான முழு பொறுப்பையும் தான் ஏற்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் அமைச்சரவைக்கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போதே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தை உருவாக்கியது யார், அதற்கான பொறுப்பை யார் ஏற்பது என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிவந்மை குறிப்பிடத்தக்கது.