20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சியிலுள்ள உறுப்பினர்கள் சிலர் ஆதரவு வழங்கவுள்ளனர் என்று அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தால் நாட்டுக்கு பாதிப்புகளே ஏற்பட்டன. எனவே, அச்சட்டம் இல்லாதுசெய்யப்படும் என நாட்டு மக்களுக்கு உறுதி வழங்கப்பட்டது. அதனை நிறைவேற்றுவதற்காகவே 20ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதனை நிறைவேற்றிக்கொள்வதற்கு குறுகிய அரசியல் நோக்கங்களைக்கைவிட்டு எதிரணி உறுப்பினர்கள் சிலர் ஆதரவு வழங்குவார்கள் என எதிர்ப்பார்க்கின்றோம். அதற்கான சமிக்ஞைகள் காட்டப்பட்டுள்ளன.” – என்றும் பீரிஸ் குறிப்பிட்டார்.
