அரவிந்தகுமார், டயானா கமகே ஆகியோருக்கு பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி பக்கத்தில் ஆசனங்களை ஒதுக்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவால் இதற்கான கோரிக்கை சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.
அத்துடன், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த எதிர்க்கட்சியின் ஏனைய ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி பகுதியிலேயே தனியாக ஆசனங்களை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
’20’ இற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள உறுப்பினர்களுக்கு ஆளுங்கட்சி பக்கம் ஆசனங்களை ஒதுக்குமாறு, எதிரணி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியல்ல அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
