’20’ ஐ தோற்கடிக்க போராடுவோம் – சஜித் சூளுரை

ஜனநாயகத்துக்கும், நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள  20 ஆவது திருத்த சட்டமூலத்தை தோல்வியடையச் செய்வதே  பிரதான நோக்கம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச சூளுரைத்துள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று (26) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

”  அரசாங்கத்தின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும் ஆபத்தாக அமைந்துவிடும். எனவே, 20 ஐ தோற்கடிப்பதே எமது இலக்கு. அதற்காக அனைத்து சக்திகளும் எமக்கு ஆதரவு வழங்கவேண்டும்.

20 ஆவது திருத்த சட்டமூலத்தில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளோம். பொதுவெளியில் கருத்தரங்கு மூலம் தெளிவுபடுத்திவருகின்றோம். அந்தவகையில் மேற்படி சட்டமூலத்தை தோற்கடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.” -என்றார்.

Related Articles

Latest Articles