அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளது.
இதன்படி எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் குறித்த விவாதத்தை நடத்துவதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இன்று இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
சபநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே இது பற்றி கலந்துரையாடி முடிவெடுக்கப்பட்டுள்ளது.