பாராளுமன்ற குழுநிலை விவாதத்தின்போது அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது என ‘டெய்லிமிரர்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
20வது அரசியல் அமைப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும் அரசாங்கத்தில் பலர் இந்த திருத்தத்தில் உள்ள சில சரத்துக்கள் தொடர்பில் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இரட்டை குடியுரிமை, கணக்காய்வு ஆணைக்குழு, அமைச்சரவையின் வரையறை போன்றவை இதில் அடங்குகின்றன.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் 20ஆவது திருத்தம் தொடர்பில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது மாற்றுக்கருத்துக்களை இதுவரை பதிவுசெய்துள்ளனர்
20வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக்கொள்வது அவசியம்.
இந்தநிலையில் குறித்த உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்கவேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.