’20’ இற்கு ஆதரவாக வாக்களிக்க இ.தொ.கா., ஈ.பி.டி.பி. முடிவு!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. ஆகியன தீர்மானித்துள்ளன.

ஆளுங்கட்சியின் பங்காளிகள்  என்றவகையில் இவ்விரு கட்சிகளும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன என்று ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன் தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, சுதந்திரக்கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி மற்றும் பிள்ளையானின் கட்சி ஆகியனவும் ’20’ இற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, எதிரணி உறுப்பினர்கள் சிலரும் 20 இற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர். எனவே, 20 ஐ நிறைவேற்றுவதற்கான மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு அதிகமான பலம் அரசு வசம் இருக்கின்றது எனவும் அந்த உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles