’20’ ஐ ஆதரித்த அரவிந்தகுமார் ஆளுநருக்கும் பொன்னாடை போர்த்தினார்!

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் தலைமையில் மலையக மக்கள் முன்னணியின் பதுளை மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் ஆகியோர் ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம். முசாம்மிலை இன்று (02) சந்தித்தனர்.

இதன்போது பதுளை மற்றும் பெருந்தோட்டப்பகுதிகளில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

அத்துடன், ஊவா மாகாணத்தில் பெரும்பாலான ஆசிரியர் உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படாமை குறித்தும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஆளுனரிடம் முன்வைக்கப்பட்ட மேற்படி விடயங்கள் குறித்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவுவிடுமாறு தமது செயலாளருக்கு உத்தரவிட்டார் என்று அரவிந்தகுமாரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles