நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 17 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. மேற்படி17 கிராம சேவகர் பிரிவுகளிலும், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2000 கொடுப்பனவுகள் வழங்குவதில் தற்போது சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது என நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே. ரவி தெரிவித்தார்.
நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பல கிராம சேவகர்கள் பிரிவுகளில் நேற்று 2000 ரூபா கொடுப்பனவு வழங்கலில் ஏற்பட்ட சிக்கல் நிலைமை தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் 1500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன . ஒரு சில கிராம சேவகர் பிரிவுகளில் 3000 தொடக்கம் 4000 குடும்பங்கள் வாழ்கின்றன. இதில் 500 தொடக்கம் 600 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு 200 தொடக்கம் 250 பேருக்கு மாத்திரம் தான் அனுமதி கிடைத்துள்ளன, ஆகவே பலர் கிராம சேவகர்களிடம் முரண்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இது குறித்து ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன். மாவட்ட பிரதேச செயலாளர்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். இது குறித்து உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து நிவர்த்தி செய்வதற்காக அவர்கள் தெரிவித்துள்ளனர்.” – என்றார்.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன.
