தீர்க்கமான முடிவுகளுக்காக திங்கள் கூடுகிறது அமைச்சரவை!

2022 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது.

நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பில் அமைச்சர்கள் மத்தியில் கருத்து முரண்பாடு நிலவிவருகின்றது. நாட வேண்டுமென ஒரு தரப்பும், நாடக்கூடாதென மற்றுமொரு தரப்பும் வலியுறுத்திவருகின்றன.

எனவே, இது தொடர்பில் கலந்துரையாடி முடிவொன்றை எடுப்பதற்காக மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

Related Articles

Latest Articles