உள்ளாட்சி சபைகளுக்கான தேர்தலை 2022 மார்ச் மாதம் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
23 மாநகரசபைகள் உட்பட 335 உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2018 பெப்ரவரியில் நடைபெற்றது.
குறித்த சபைகளின் பதவிக்காலம் அடுத்த வருடம் ஜனவரியில் முடிவுக்கு வருகின்றது. இந்நிலையிலேயே தேர்தலை ஏப்ரல் மாதத்துக்குள் அதாவது மார்ச் மாதமளவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு கலப்பு முறையிலேயே உள்ளாட்சிமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதன்மூலம் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதுடன், பெண் பிரதிநிதித்துவமும் கட்டாயமாக்கப்பட்டது.
உள்ளாட்சிமன்ற தேர்தல் முறைமையில் சில குளறுபடிகள் உள்ளன. இதனால் ஸ்தீரமற்ற ஆட்சியும் அமைக்கின்றது. எனவே, சில திருத்தங்களுக்கு மத்தியிலேயே தேர்தல் இடம்பெறும்.










