2023- உலக கிண்ண தொடருக்கான தகுதிகான் போட்டிகள் நாளை மறுதினம் ஆரம்பம்!

2023 ஆம் ஆண்டு உலக கிண்ண தொடருக்கான தகுதிக்கான சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று ஐ.சி.சி. நேற்று அறிவித்தது.

13ஆ வது ஒருநாள் (50 ஓவர்) உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) ஒருநாள் சூப்பர் லீக் என்ற பெயரில் கணக்கிடப்படும் தொடரில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும்.

இந்த போட்டி தொடரில் முழு உறுப்பினர்களான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே மற்றும் 2015-17ஆம் ஆண்டில் நடந்த உலக சூப்பர் லீக் போட்டியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து ஆகிய 13 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் ஒவ்வொரு அணியும் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் தலா 4 ஒருநாள் போட்டி தொடரில் விளையாட வேண்டும். ஒவ்வொரு தொடரிலும் 3 ஒருநாள் ஆட்டங்கள் இடம் பெறும். இதன்படி ஒரு அணி மொத்தம் 24 ஒருநாள் போட்டியில் விளையாடும்.

ஒவ்வொரு வெற்றிக்கும் 10 புள்ளியும், கைவிடப்பட்ட ஆட்டம், முடிவு இல்லை மற்றும் ‘டை‘யில் முடிந்த ஆட்டத்துக்கு தலா 5 புள்ளியும் வழங்கப்படும். இந்த போட்டி தொடரின் முடிவில் முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் போட்டியை நடத்தும் இந்தியா ஆகியவை நேரடியாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.

சூப்பர் லீக் போட்டியில் தகுதி இலக்கை எட்டாத 5 அணிகள், 5 அசோசியேட் நாட்டு அணிகளுடன் இணைந்து உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் மோத வேண்டும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டியின் எஞ்சிய 2 தகுதிக்கான இடங்களை தனதாக்கும்.

2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு தகுதியாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும் ஒருநாள் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த மே மாதம் தொடங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த போட்டியை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் உலக கோப்பை தகுதிக்கான ஒருநாள் சூப்பர் லீக் போட்டி வருகிற 30 ஆம் திகதி  தொடங்கும் என்று (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது.  முதல் போட்டியில் இங்கிலாந்து, அயர்லாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles