2024 இல் ஐ.தே.க. ஆட்சி சாத்தியமா? ஆம் என்கிறார் மூத்த உறுப்பினர்

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய கூட்டமொன்று கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தலைமையில் நடைபெற்றது. கட்சி மாநாடு, கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும் இதன்போது அலசி ஆராயப்பட்டுள்ளது.

அப்போது, “ 2024 இல் ஆட்சியைப் பிடிப்போம் என்று நீங்கள் அடிக்கடி கூறிவருகின்றீர்கள். அதற்கான திட்டம் என்ன, இது உண்மையா” – என உறுப்பினர் ஒருவர் வஜிரவிடம் வினா எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த வஜிர அபேவர்தன, “ அம். 2024 இல் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி அமைக்கும். இதனை தெளிவாக டயரியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். வியூகம் பற்றி இப்போதே கூறமுடியாது.” – என்றாராம்.

அதேவேளை, கடந்தவாரம் ஆளுங்கட்சி கூட்டமொன்றும் நடைபெற்றுள்ளது. இதன்போது அரிசி மற்றும் சீனி மாபியாக்களுக்கு கட்டாயம் முடிவு கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரமே ஜனாதிபதியால் சில அதிரடி முடிவுகள் எடுக்கப்ப்டுள்ளன.

Related Articles

Latest Articles