2029 இல் பொது வேட்பாளர் யார்? நாமல் கூறுவது என்ன?

“2029 ஜனாதிபதி தேர்தலின்போது பொதுவேட்பாளர் யார் என்பது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்

“ ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட எதிரணிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தால் 2029 ஜனாதிபதி தேர்தலின்போது பொதுவேட்பாளர் யார் என்பது தொடர்பில் சர்ச்சை ஏற்படாதா?

அவ்வாறு எழும் பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் .” என நாமல் ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர்,

“இது பற்றி 2029 ஆம் ஆண்டில் கதைப்போதும். தற்போது விவாதிக்க வேண்டிய விடயம் அல்ல அது.

எதிரணிகள் ஒன்றிணைந்து வலுமான அரசியல் பயணத்தை முன்னெடுப்பது பற்றியே தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.” – என்றார்.

Related Articles

Latest Articles