2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பில் தமது கட்சியின் நிலைப்பாடு நாளை அறிவிக்கப்படும் என்று சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார்.
சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
நாளை கட்சியின் நிறைவேற்றுக்குழு கூடி ஆராய்ந்த பின்னர், கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.