நாட்டில் கடந்த சில தினங்களாக 215 பாரிய மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை, மொனறாகலை மற்றும் குருணாகலை ஆகிய மாவட்டங்களிலேயே மேற்படி பாரிய அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், சிறு அளவிலான மண்சரிவு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
